பள்ளிக்கு வெளியே வீசும் துர்நாற்றம்
சென்னையை அடுத்த ஆவடி மாநகராட்சியில் உள்ள பழம்பெரும் பள்ளியான செயிண்ட் ஜோசப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு வரை சுமார் 3,500 மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.
Updated On : 27 ஜனவரி, 2024 at 9:45 PM
சென்னையை அடுத்த ஆவடி மாநகராட்சியில் உள்ள பழம்பெரும் பள்ளியான செயிண்ட் ஜோசப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு வரை சுமார் 3,500 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இந்தப் பள்ளியின் நுழைவு வாயிலில் ஒரு பக்கம் துர்நாற்றம் வீசும் கால்வாயும் மறுபக்கம் குப்பைமேடும் இருக்கின்றன. தற்போது கரோனா தொற்று அச்சம் நிலவி வரும் சூழலில் இந்தக் குப்பைகளை அகற்ற ஆவடி மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
என்.டி.ராமன், ஆவடி.