முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 882

இந்த உடல் நிலைத்திருக்கும்..

Updated On : 3 ஆகஸ்ட், 2018 at 10:56 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:54 PM

‘இந்த உடல் நிலைத்திருக்கும் என்று நம்பி அழியாமல், பசித்து வந்தவருக்கு உணவளித்திடும் பேற்றைத் தரவேண்டும்’ என்று கோரும் இப்பாடல் திருத்தணிகைக்குரியது.

அடிக்கு ஒற்றொழித்து 22 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று முதல் ஆறு வரையிலான எல்லாச் சீர்களிலும் மூன்று குறிலும் ஒரு வல்லொற்றுமாக மூன்று-மூன்று எழுத்துகள் அமைந்துள்ளன.

தனனத் தனனத் தனனத் தனனத்

Advertisement

      தனனத் தனனத்                     தனதான

அமைவுற் றடையப் பசியுற் றவருக்

         கமுதைப் பகிர்தற்                கிசையாதே

      அடையப் பொருள்கைக் கிளமைக் கெனவைத்

         தருள்தப் பிமதத்                 தயராதே

தமர்சுற் றியழப் பறைகொட் டியிடச்

         சமனெட் டுயிரைக்               கொடுபோகுஞ்

      சரிரத் தினைநிற் குமெனக் கருதித்

         தளர்வுற் றொழியக்               கடவேனோ

இமயத் துமயிற் கொருபக் கமளித்

         தவருக் கிசையப்                 புகல்வோனே

      இரணத் தினிலெற் றுவரைக் கழுகுக்

         கிரையிட் டிடுவிக்                ரமவேலா

சமயச் சிலுகிட் டவரைத் தவறித்

         தவமுற் றவருட்                 புகநாடும்

      சடுபத் மமுகக் குகபுக் ககனத்

         தணியிற் குமரப்                 பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.