FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வலைப்பூ

இப்படி பண்றீங்களேப்பா..

ஒரு மாலை நேரம். பூங்காவில் உலாவிக் கொண்டிருந்தனர் கணவனும் மனைவியும்.

Updated On : 17 அக்டோபர் 2016, 6:00 pm IST
பகிர்:

ஒரு மாலை நேரம். பூங்காவில் உலாவிக் கொண்டிருந்தனர் கணவனும் மனைவியும்.

மனைவி, ""எனக்கு அடுத்த வாரம் பிறந்தநாள் வருது. ஞாபகம் இருக்கா?'' என்று கேட்டாள்.

""ஞாபகம் இல்லாமல் என்ன? ஒரு கிஃப்ட் கூட வாங்கித் தர ப்ளான் இருக்கு'' என்றான் கணவன்.

மனைவிக்கோ மகிழ்ச்சி. ""இப்படி ஏதாவது சர்ப்ரைஸ் கொடுப்பீங்கன்னு நினைச்சேன். என்ன கிஃப்ட்டுங்க?''என்று ஆர்வத்தை அடக்க முடியாமல் கேட்டாள் மனைவி.

""அடுத்த வாரம் சொல்றேனே...''

 ""இல்ல... இப்பவே சொல்லுங்க''

 ""சரி... அங்கே ஒரு அரசமரம் தெரியுதா?''

 ""அதுக்குக் கீழே நிறைய வண்டிகள் இருக்கு பாரு''

 ""லெஃப்ட்ல ஒரு ரெட் ஃபெராரி நிக்குதுல...''

 ""ஆமா.. ஆமா...''

 ""அந்தக் கலர்ல ஒரு இம்போர்டட்....''

 ""இம்போர்டட்...?''
 
""நெய்ல் பாலிஷ் பாட்டில் வாங்கித் தாரேன்'' என்றான் கணவன்.

-  க.சங்கர், நாகர்பாளையம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments