FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகத் தமிழர்

அமெரிக்காவில் கொண்டாடப்பட்ட பெரியார் - அண்ணா பிறந்தநாள் விழா

அமெரிக்காவின் முதல் மாநில மாம்டெலவரில் செப் 29, 2018, சனிக்கிழமையன்று டெலவர் பள்ளத்தாக்கு தமிழ் நண்பர்கள் தந்தை பெரியாரின் 140வது மற்றும் பேரறிஞர் அண்ணாவின் 110வது பிறந்தநாளை பெருவிழாவாக ஏற்பாடு செய்த

Updated On : 2 அக்டோபர் 2018, 3:29 pm IST
பகிர்:

அமெரிக்காவின் முதல் மாநில மாம்டெலவரில் செப் 29, 2018, சனிக்கிழமையன்று டெலவர் பள்ளத்தாக்கு தமிழ் நண்பர்கள் தந்தை பெரியாரின் 140வது மற்றும் பேரறிஞர் அண்ணாவின் 110வது பிறந்தநாளை பெருவிழாவாக ஏற்பாடு செய்திருந்தனர். 

அதில் டெலவர், பென்சலவேனியா, நியூசெர்சி, மேரிலாந்து மற்றும் விர்சீனியா மாநிலத்திலிருந்து திரளாக தமிழ் மக்கள் வந்து கோலகலமாகக் கொண்டாடி, கருத்துகளை பகிர்நதுமகிழ்ந்தனர்.

இவ்விழாவின் சிறப்பாக பல்வேறு போட்டிகள் நடைப்பெற்றன. திருமிகு. ரமா ஆறுமுகம் மற்றும் திருமிகு.ஜெசிபிரியா பிரசாத் விழாவினை அருமையாக தொகுத்து வழங்கினார்கள்.

திருமிகு.ஜெய் (ரஜினி தென்னிந்திய உணவகம் உரிமையாளர்) கூறுகையைில், தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சமூகநீதி தொண்டினால்தான், என் போன்ற எளிய பிள்ளைகள் அமெரிக்கா வரவும், இவ்வுயரத்தை அடையவும் முடிந்தது என்று கூறினார்.

Advertisement

Advertisement

தொடர்ந்துவினாடிவினாப்போட்டிகள்நடைபெற்றன. 

வினாடி வினா போட்டியை நடத்திய திருமிகு. ராஜ்குமார் களியபெருமாள் கூறுகையில், “பெரியார், அண்ணா வாழ்க்கை மற்றும் கொள்கைகள் சார்ந்த கேள்விகள் கேட்கப்பட்டன. அண்ணாவைப் பற்றியோ அல்லது பெரியாரைப் பற்றியோ கட்டுரை எழுதுங்கள் என்று கூறினால் உடனே இருபக்கம் எழுதிவிடுமளவுக்கு பயிற்சி எடுத்திருக்கிறார்கள். இதுவே இந்த போட்டியின் நோக்கம். அதுநிறைவேறியதாக உணர்கிறோம். 
கடல் கடந்த அமெரிக்க மண்ணில் பெரியாரிய சிந்தனைகளை பெரியார் பிஞ்சுகள் அறிந்து பதிலிளித்தது உள்ளபடியெ மகிழ்ச்சியளித்தது”  என்றார். அவர்களைப் பயிற்றுவித்த பெற்றோர்களுக்கும் அவர் நன்றி கூறினார்.

திருமிகு. தனம் பெரியசாமி அவர்கள் சிறப்பு பேச்சாளராக வந்திருந்து சிறப்பளித்தார். ஈரோட்டில் பெரியார் வாழ்ந்த அதே தெருவில் பெரியார் வாழ்ந்த காலத்தில் வசித்தவர். பெரியாரை பற்றிய அரிய தகவல்களை அவர் கூறி மகிழ்ந்து அனைவரையும் மகிழ்வித்தார்.

அதனைத் தொடர்ந்து பெரியவர்களுக்கான பேச்சுப்போட்டி நடைபெற்றது.

விழாவின் முத்தாய்ப்பாக தமிழர் மரபான கும்மி மற்றும் பறையிசை நிகழ்ச்சி நடைப்பெற்றது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கூடிய அனைவரும் கண்டு ரசித்து மகிழ்ந்தனர்.

“சமூக நீதிக்காவலர்கள்பெரியார், அண்ணா” என்ற தலைப்பின் கீழ்சமூகநீதி, பகுத்தறிவு, சுயமரியாதை, பெண்ணியம் மற்றும் சமத்துவம் என்ற துணைதலைப்புகளோடு கருத்தரங்கம் சிறப்பாக நடைப்பெற்றது. 

"சாமானிய மனிதர்கள்" என்ற தலைப்பில் பலதரவுகளுடன் தோழர் முனைவர் சொர்ணம் சங்கர் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். அவர் திரையில் 1901 முதல் தற்போது வரையிலான தமிழ் சமூக வளர்ச்சியின் வேகத்தையும், அதற்கான பெரியார், அண்ணாவின் பங்களிப்பையும் விவரித்துக் கூறினார். அதன் பின் தமிழ்நாட்டிலிருந்து தனது மகனைப் பார்க்க அமெரிக்கா வந்திருந்த திருமிகு.வசந்தகோகிலா அவர்கள் நாகூர் அனிபாவின் “எங்களை ஏங்க விட்டு எங்கே சென்றாய்.. அண்ணா..”என்ற பாடலை அருமையாகப்பாட அரங்கமே அமைதியில் மூழ்கியது. 



அனைவரும் எழுந்து நின்று அவர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

"தமிழகத்தின் விடி வெள்ளி பெரியார்" என்ற தலைப்பில் தோழர் திருமிகு. கனிமொழியின் பேச்சு அநீதிகளை வெடித்துச் சிதறவைக்கும் ஒரு துப்பாக்கித் தோட்டா போலிருந்தது. தற்கால அரசியலின் அநீதிகளைக்களைய பெரியாரின் சிந்தனைகள் எப்படி பயன்படும் என்று எடுத்துரைத்தார்.

விழாவிற்கு வந்திருந்த அனைத்து பெண்களுக்கும் “பெண் ஏன் அடிமையானாள்?” என்ற புத்தகத்ததை விழாக்குழுவில் ஒருவரான திரு. ராஜ்குமார் வழங்கினார்.

விழாவின் இறுதியாக பரிசளிப்பு விழா நடைப்பெற்றது. விழாவிற்கு வந்த அனைவருக்கும் திருமிகு. துரைக்கண்ணன் நன்றியுரை கூற விழா இனிதே நிறைவுப் பெற்றது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments