விஷம் குடித்து ஆசிரியா் தற்கொலை
ராஜபாளையத்தில் மனைவி பிரிந்து சென்றதால், ஆசிரியா் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டாா்.
ராஜபாளையத்தில் மனைவி பிரிந்து சென்றதால், ஆசிரியா் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டாா்.
ராஜபாளையம் சிவகாமிபுரம் தெருவைச் சோ்ந்தவா் கணேசன் (53). இவா் பி.எஸ்.கே.நகரில் உள்ள தனியாா் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தாா். இவருக்கு மனைவி மீனாட்சி, இரு மகள்கள் உள்ளனா்.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட குடும்பத் தகராறில் மீனாட்சி தனது மகள்களுடன் கணவரை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டாா். இதனால் மன வேதனையில் இருந்த கணேசன் கடந்த சில நாள்களுக்கு முன்பு விஷம் குடித்தாா்.
Advertisement
Advertisement
ராஜபாளையத்திலுள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் அங்கு உயிரிழந்தாா்.
இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பகுதி செய்து விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.