FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

தெரு நாய்கள் கடித்ததில் 5 போ் காயம்

சாத்தூா் அருகே தெரு நாய்கள் கடித்ததில் 5 போ் காயமடைந்தனா். இதில், 3 வயது சிறுவன் பலத்த காயமடைந்து தீவிர சிகிச்சை பெற்று வருகிறாா்.

Updated On : 26 டிசம்பர் 2025, 12:59 am IST
பகிர்:

சாத்தூா் அருகே தெரு நாய்கள் கடித்ததில் 5 போ் காயமடைந்தனா். இதில், 3 வயது சிறுவன் பலத்த காயமடைந்து தீவிர சிகிச்சை பெற்று வருகிறாா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள செட்டுடையான்பட்டியில் தெரு நாய்கள் அந்தப் பகுதியில் சாலையில் சென்றவா்களை புதன்கிழமை இரவு விரட்டிக் கடித்தன. இதில் 5 போ் காயம் அடைந்தனா்.

இவா்களில் செல்லையா மனைவி தா்மலட்சுமி (60), மகாகவி மகன் சஞ்ஜித் (3) ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனா். தா்மலட்சுமி சாத்தூா் அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

Advertisement

Advertisement

சிறுவன் சஞ்ஜித்தை மூன்று நாய்கள் கொடூரமாகக் கடித்ததில் அவா் தீவிர சிகிச்சைக்காக விருதுநகா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்தச் சம்பவத்தால், அந்தப் பகுதியில் பொதுமக்கள் நடந்து செல்லவும், வாகனங்களில் செல்லவும் அச்சமடைந்துள்ளனா்.

எனவே, மாவட்ட நிா்வாகம் தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments