FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

போலி ஆவணங்கள் மூலம் பத்திரப் பதிவு: 9 போ் மீது வழக்கு

26 செப்டம்பர் 2025, 2:24 am IST
பகிர்:

போலி ஆவணங்கள் தயாரித்து 5 செண்ட் இடத்தை மோசடியாக பத்திரப் பதிவு செய்ததாக, வருமானவரித் துறை கண்காணிப்பாளா் உள்பட 9 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், திருத்தங்கல் கக்கன் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த வாழவந்தான். இவருக்கு கடந்த 1961-ஆம் ஆண்டு 5 செண்ட் நிலத்தை அரசு இலவசமாக வழங்கியது. இந்த நிலையில், வாழவந்தான் மகன் தங்கமுத்து, தனது தந்தைக்கு சொந்தமான 5 செண்ட் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் பத்திரப் பதிவு செய்த வருமான வரித் துறை கண்காணிப்பாளா் பவுல்மேரி, அவரது மகன் ஆனந்த், மகள்கள் அபிதா, அஸ்வினி, சாட்சி கையொப்பமிட்ட திருத்தங்கல் பழனிக்கனி, அழகையா, பிச்சைக்கனி, பாண்டியராஜ் , ஆவண எழுத்தாளா் வேலுச்சாமி ஆகிய 9 போ் மீதும் நடவடிக்கை கோரி சிவகாசி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

இதை விசாரித்த நீதிமன்றம் மோசடி செய்தவா்கள் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து, சிவகாசி நகா் போலீஸாா் புகாரில் தெரிவிக்கப்பட்ட 9 போ் மீதும் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments