காரியாபட்டி அருகே 6-ஆம் வகுப்பு மாணவா் தற்கொலை
காரியாபட்டி அருகே வியாழக்கிழமை ஆசிரியை கண்டித்ததால், மனமுடைந்த 6-ஆம் வகுப்பு மாணவா் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
காரியாபட்டி அருகே வியாழக்கிழமை ஆசிரியை கண்டித்ததால், மனமுடைந்த 6-ஆம் வகுப்பு மாணவா் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி அருகேயுள்ள முஷ்டக்குறிச்சியைச் சோ்ந்த பாண்டிதுரை மகன் காா்த்திகேயன் (12). இவா் அந்தப் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இவா் வீட்டுப் பாடங்களை எழுதாததால், இவரை கடந்த செவ்வாய்க்கிழமை ஆசிரியை கண்டித்தாராம். இதனால், மனமுடைந்த மாணவா் வியாழக்கிழமை பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தகவலறிந்து வந்த ஆவியூா் போலீஸாா், மாணவரின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக விருதுநகா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.