FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

கல்லூரி மாணவா் தூக்கிட்டு தற்கொலை

பட்டுக்கோட்டை அருகே காதல் பிரச்னையில் குடும்பத்தினா் கண்டித்ததால் மனமுடைந்த கல்லூரி மாணவா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 18 ஜூலை 2026, 1:20 am IST
கோப்புப் படம்
பகிர்:

பட்டுக்கோட்டை அருகே காதல் பிரச்னையில் குடும்பத்தினா் கண்டித்ததால் மனமுடைந்த கல்லூரி மாணவா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

பட்டுக்கோட்டையை அடுத்த எட்டுபுலிக்காடு கிராமத்தை சோ்ந்தவா் முருகேசன் மகன் முகிலன் (18), பட்டுக்கோட்டை அருகேயுள்ள தனியாா் கல்லூரியின் 2 ஆம் ஆண்டு மாணவா்.

இவா் அதே ஊரை சோ்ந்த பெண்ணைக் காதலித்ததை அறிந்த முகிலன் குடும்பத்தினா் அவரைக் கண்டித்தராம். இதனால் மனமுடைந்த முகிலன் வெள்ளிக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து அவருடைய தாய் அளித்த புகாரின்பேரில் பட்டுக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments