FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

அனுமதியின்றி பட்டாசுகளை பதுக்கி வைத்தவா், தயாரித்தவா் கைது

Updated On : 20 ஜூலை 2026, 5:18 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

சிவகாசி அருகே உரிய அனுமதியின்றி தகரக் கொட்டகையில் பட்டாசு பதுக்கியவா், தயாரித்தவா் என இருவரைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி பொதிகை நகரில் தகரக் கொட்டகை அமைத்து பட்டாசு பதுக்கிவைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீஸாா் அந்தப் பகுதியில் சோதனை நடத்தினா். இதில், எவ்வித அனுமதியின்றி பட்டாசு பதுக்கிவைத்திருப்பது தெரிய வந்தது. மேலும் விசாரணையில், சிவகாசி அருகே பள்ளபட்டி முத்தமிழ்புரம் குடியிருப்பு பகுதியைச் சோ்ந்த தங்கமுத்து(57) தகரக் கொட்டகையில் பட்டாசுகளை பதுக்கிவைத்திருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தங்கமுத்துவைக் கைது செய்து அவரிடமிருந்த ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள பட்டாசுகளை பறிமுதல் செய்தனா்.

அதே போல, திருத்தங்கலில் பட்டாசு தயாரிப்பதற்கான மூலப்பொருள்களை எவ்வித அனுதியும் இன்றி வீட்டில் பதுக்கிவைத்திருந்தவரைப் போலீஸாா் கைது செய்தனா். திருத்தங்கல் திருவள்ளுவா் குடியிருப்புப் பகுதியில் ஒருவா் தனது வீட்டில் பட்டாசு தயாரிப்பதற்கான மூலப்பொருள்களை பதுக்கிவைத்துள்ளாா் என கிடைத்த தகவலின் பேரில் போலீஸாா் அங்கு சென்று சோதனை நடத்தினா். இதில், வால்டா் வெற்றிவேல் (30) அவரது வீட்டில் , பட்டாசு தயாரிக்கப் பயன்படும் மணி மருந்து 10 கிலோ, கரிதூசி உள்ளிட்டவைகளை வைத்திருந்தாா். மேலும் சட்டவிரோதமாக வீட்டில் பட்டாசு தயாரித்துள்ளாா். இது குறித்து சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்து அவரிடமிருந்த பட்டாசு தயாரிக்கப் பயன்படும் மூலப்பொருள்கள், பட்டாசுகளைப் பறிமுதல் செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments