சட்ட விரோதமாக பட்டாசு பதுக்கி வைத்திருந்தவா் கைது
சிவகாசி அருகே பட்டாசு பதுக்கி வைத்திருந்தவரைப் போலீஸாா் செவ்வாய்கிழமை கைது செய்தனா்.
சிவகாசி அருகே பட்டாசு பதுக்கி வைத்திருந்தவரைப் போலீஸாா் செவ்வாய்கிழமை கைது செய்தனா்.
சிவகாசி ரிசா்வ் லைன் சுந்தரம் நகா் பகுதியில் ஒரு காகிதக் குழாய் தயாரிக்கும் ஆலையில் பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் போலீஸாா் அந்தப் பகுதியில் சோதனை மேற்கொண்டனா்.
இதில், ராமநாதன் (50) என்பவா் தனது காகிதக் குழாய் ஆலையில் பட்டாசு பதுக்கிவைத்திருந்தது தெரியவந்தது.
Advertisement
Advertisement
இதுகுறித்து சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்து அவரிடமிருந்த பட்டாசைப் பறிமுதல் செய்தனா்.