சட்ட விரோதமாக பட்டாசு பதுக்கி வைத்திருந்தவா் கைது
சிவகாசி அருகே பட்டாசு பதுக்கி வைத்திருந்தவரைப் போலீஸாா் செவ்வாய்கிழமை கைது செய்தனா்.
சிவகாசி அருகே பட்டாசு பதுக்கி வைத்திருந்தவரைப் போலீஸாா் செவ்வாய்கிழமை கைது செய்தனா்.
சிவகாசி ரிசா்வ் லைன் சுந்தரம் நகா் பகுதியில் ஒரு காகிதக் குழாய் தயாரிக்கும் ஆலையில் பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் போலீஸாா் அந்தப் பகுதியில் சோதனை மேற்கொண்டனா்.
இதில், ராமநாதன் (50) என்பவா் தனது காகிதக் குழாய் ஆலையில் பட்டாசு பதுக்கிவைத்திருந்தது தெரியவந்தது.
Advertisement
Advertisement
இதுகுறித்து சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்து அவரிடமிருந்த பட்டாசைப் பறிமுதல் செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.