முகப்பு
தினமணி கதிர்

ஆறுகளே இல்லாத நாடுகள்...

ஆறுகள் இல்லாவிடில் மனிதர்களின் குடிநீர், வளர்ச்சிகள் கடுமையாகப் பாதிக்கும். ஆனால், சில நாடுகளில் ஆறுகளே கிடையாது.

Updated On : 22 செப்டம்பர் 2024, 3:01 pm IST
வாடிகன்சிட்டி
பகிர்:

ஆறுகள் இல்லாவிடில் மனிதர்களின் குடிநீர், வளர்ச்சிகள் கடுமையாகப் பாதிக்கும். ஆனால், சில நாடுகளில் ஆறுகளே கிடையாது.

சௌதி அரேபியா: ஆறுகள் இல்லாத மிகப் பெரிய நாடுகளில் ஒன்று. இந்த நாடு கடல்நீரை குடிநீராக மாறுகிறது. 70 % குடிநீர் உப்புநீக்கம் மூலம் கிடைக்கிறது. மேலும், மீண்டும் பயன்படுத்தப்படுகிறது.

கத்தார்: நதிகள் இல்லை. இந்த நாடும் கடல்நீரை உப்பு நீக்கம் செய்துதான் பயன்படுத்திவருகிறது. இங்குள்ள நீர் 99% உப்புநீக்கம் மூலமே கிடைக்கிறது. கத்தார் உலகிலேயே அதிக தனிநபர் நீரைப் பயன்படுத்தும் நாடாகும்.

Advertisement

Advertisement

ஐக்கிய அரபு எமிரேட்ஸ்: துபை, அபுதாபி மிகப் பிரபலமான நாடுகள். இவ்விரு நாடுகளும் கடல்நீரை சுத்திகரித்துதான் பயன்படுத்துகின்றன. தொழிற்சாலைகளில் அழுக்குநீர் சுத்தம் செய்யப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.

குவைத்: அரேபிய வளைகுடாவின் வடக்குப் பகுதியில் உள்ள நாடு. இங்கும் கடல்நீர் சுத்திகரிக்கப்பட்டு நல்நீர் பெறப்படுகிறது.

மாலத்தீவுகள்: கடல்நீரை சுத்தமாக்க, பணவசதி இல்லை. இதனால் மழைநீரை சேமித்து, சுத்திகரித்து பயன்படுத்துகிறது.

பக்ரைன்: பாரசீக வளைகுடாவில் உள்ள ஒரு தீவு நாடு. இயற்கையான ஆறுகள் இல்லை. மாறாக, நிலத்தடிநீர் ஆதாரங்கள், நீருற்றுகள் உள்ளன.

ஓமன்: அரேபிய தீபகற்பகத்தின் தென்கிழக்கு கடற்கரையில் உள்ளது. பல பள்ளத்தாக்குகள் உள்ளன. மழைக்காலத்தில் அவற்றில் தண்ணீர் நிரம்பி கால்வாயாக உருவாகிறது. தண்ணீரைச் சேமிக்க, பல்வேறு விவசாயத் தொழில்நுட்பங்களை இந்த நாடு பின்பற்றி வருகிறது.

வாடிகன்சிட்டி: ஆறுகள் இல்லை. ஆனால், இத்தாலி இந்தப் பகுதிக்கு நீர்விநியோகம் செய்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments