FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

உங்கள் போட்டோக்கள் என்னவாகும்?

அறிதிறன்பேசிகளில் எடுக்கப்படும் போட் டோக்களை கணினியில் தானாகமாற்றம் செய்யும் சேவையை (பேக்கப்)கூகுள் டிரைவ் ஆகஸ்ட் 10-ஆம் தேதி முதல் நிறுத்தி உள்ளது.

22 ஆகஸ்ட் 2026, 7:30 pm IST
பகிர்:

அறிதிறன்பேசிகளில் எடுக்கப்படும் போட் டோக்களை கணினியில் தானாகமாற்றம் செய்யும் சேவையை (பேக்கப்)கூகுள் டிரைவ் ஆகஸ்ட் 10-ஆம் தேதி முதல் நிறுத்தி உள்ளது.

கூகுளின் ஜிமெயில், போட்டோஸ், வாட்ஸ்ஆப் போன்றவற்றில் வரும் புகைப்படங்கள், விடியோக்கள், டேட்டா பைல்கள் தானாக கூகுள் டிரைவில் சேமிக்கப்படும் வசதியை கூகுள் வழங்கி வந்தது. ஆனால், ஜிமெயிலின் 15 ஜிபி இலவச சேமிப்பில் இருந்து 5 ஜிபியாக அண்மையில் கூகுள் குறைத்தது.

15 ஜிபி இருக்கும்போதே பலர் ஜிமெயில் சேமிப்புக்கே இடமில்லாமல் கட்டணச் சேமிப்பு சேவைக்குத் தள்ளப்பட்டனர்.இதில் போட்டோஸ், வாட்ஸ்ஆப் தகவல்கள் ஆகியவை இணைந்ததால் கூகுள் டிரைவ் பெரும்பாலான பயன்பாட்டாளர்களுக்கு நிரம்பி, காலி செய்ய முடியாமல் கடைசியில் ஜிமெயில் முகவரியே பயன்படுத்த முடியாத நிலைக்குச் சென்றுவிட்டனர்.

Advertisement

Advertisement

இந்நிலையில், அறிதிறன்பேசியில் கூகுள் டிரைவில் உள்ள போட்டோக்கள், விடியோக்களை கணினியில் தானாக சேமிக்கும் சேவையை கூகுள் ஆகஸ்ட் 10-ஆம் தேதி முதல் நிறுத்தி உள்ளது. இந்தச் சேவையைத் தொடர்ந்து பெற, கூகுள் டிரைவுக்குப் பதிலாக கூகுள் போட்டோஸில் போட்டோக்களை சேமிக்கலாம். அதே நேரத்தில் ஏற்கெனவே கூகுள் டிரைவில் சேமிக்கப்பட்டுள்ள புகைப்படங்கள், விடியோக்களுக்கு எந்தவிதப் பாதிப்பும் வராது என கூகுள் உறுதி அளித்துள்ளது.

இதன்படி, கணினியில் உள்ள போட்டோ, விடியோக்களை கூகுள் போட்டோக்களில் பதிவேற்றம் செய்து சேமித்து வைத்துக்கொள்ள, கணினியில் உள்ள கூகுள் போட்டோஸ் செயலியில், ஆப்சன்ஸ், பேக்கப் போல்டர்ஸ் என்பதை தேர்வு செய்துவிட்டு நாம் சேமிக்க விரும்பும் போட்டோ, விடியோக்கள் அடங்கிய போல்டரை தேர்வு செய்யவேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments