FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சிரி... சிரி...

கல்யாணத்துக்குக் கடன் வாங்கிட்டு, அதை ஏன் விவசாயக்கடன்னு சொல்றீங்க?

5 செப்டம்பர் 2026, 7:04 pm IST
பகிர்:

'கல்யாணத்துக்குக் கடன் வாங்கிட்டு, அதை ஏன் விவசாயக்கடன்னு சொல்றீங்க?'

'கல்யாணம்கிறது ஆயிரம் காலத்துப் பயிர்தானே!'

-க.நாச்சிமுத்து, திண்டுக்கல்.

Advertisement

Advertisement



'பக்கத்து வீட்டுக்காரரைப் பார்த்து ரொம்ப பொறாமை வருதுன்னு சொல்றீங்களே, அவர் அவ்

வளவு வசதியானவரா?'

'இல்லைங்க... அவர் படுத்த உடனேயே நல்லா குறட்டைவிட்டுத் தூங்குறாரே!'

-எம். பி .தினேஷ், இடையர்பாளையம்.



'அந்த ஜோசியர்கிட்ட மட்டும் ஏன் நிறைய அரசியல்வாதிங்க வர்றாங்க?'

'வீட்டுக்கு ரெய்டு எப்ப வரும்னு கரெக்டா சொல்வாராம்!'



'ஆஸ்பத்திரியில தனியா இருக்க ஒரே பயமா இருக்கு, டாக்டர்!'

'அப்ப வெளியே போய் நாலஞ்சு பேஷண்டைக் கூட்டிக்கிட்டு வாங்க!'

-தீபிகா சாரதி, சென்னை 5.



'பயப்படாமல் இருந்தாலே உங்களுக்குப் பாதி வியாதி குணமாயிடும்.'

'உங்க பீஸ் இரண்டாயிரம்னா எப்படி டாக்டர் பயப்படாமல் இருக்கமுடியும்?!'

-வி.ரேவதி, தஞ்சை.



'இந்த உலகத்துல நல்ல மனிதர்களை எப்படிக் கண்டுபிடிக்கிறது?'

'எதுக்கும் 'கூகுள்'ல தேடிப் பாருங்களேன்!'

-கே.இந்து குமரப்பன், விழுப்புரம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments