முகப்பு
மகளிர்மணி

தலை சீவும்போது கவனிக்க வேண்டியவை!

தலைக்கு குளித்தவுடன் ஈரமாக உள்ள கூந்தலை சீவக் கூடாது.  ஏனெனில் கூந்தலானது ஈரமாக இருக்கும் போது சீவினால் முடியில் முடிச்சுகள் மற்றும் சிக்குகள் அதிகமாக இருக்கும்.

Updated On : 12 செப்டம்பர் 2018, 6:47 pm IST
பகிர்:


தலைக்கு குளித்தவுடன் ஈரமாக உள்ள கூந்தலை சீவக் கூடாது.  ஏனெனில் கூந்தலானது ஈரமாக இருக்கும் போது சீவினால் முடியில் முடிச்சுகள் மற்றும் சிக்குகள் அதிகமாக இருக்கும்.  இந்த நிலையில் சீப்பை கொண்டு சீவினால் முடியானது கொத்தாக வேரோடு வந்துவிடும்.


தலை சீவும் போது மண்டை  ஓட்டில் நன்கு பதியும்படி சீவ வேண்டும். கூந்தலும், தலைச்சருமமும் ஒன்றல்ல. ஆகவே தலைச்சருமத்தில் நன்கு படும்படி சீவினால் தலைச்சருமத்தில் இரத்த ஓட்டம் அதிகரித்து மயிர்க்கால்  தூண்டப்பட்டு  முடி நன்கு வளரும். இவ்வாறு தினமும் செய்தால் கூந்தலானது நன்கு ஆரோக்கியமாக வளரும்.


கூந்தலை முதலில் சீவ ஆரம்பிக்கும்போது கூந்தலின் முனையில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்.  ஏனென்றால் கூந்தலில் முடிச்சுகளானது முனையிலேயே அதிகமாக இருக்கும். ஆகவே  முதலில் இந்த முடிச்சுகளை அகற்றிப் பின் ஆரம்பத்தில் இருந்து சீவினால்  கூந்தல் உதிராமல் இருக்கும். இல்லையென்றால் கூந்தல் வேரோடு தான் வரும்.

Advertisement

Advertisement


கூந்தலை இறுக்கமாக கட்டக்கூடாது.  நிறையபேர் இந்த மாதிரியே கூந்தலை கட்டுகின்றனர்.   அதுபோன்று கூந்தலை போனி டைல் போடக்கூடாது. அப்படி போட்டால் முடியானது பிளவுபட்டு  வளர்ச்சி தடைப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments