முகப்பு
மகளிர்மணி

மருதாணியின் மகத்துவம்!

மருதாணி இலைகளை அரைத்து நெற்றிப் பொட்டில் தடவ தலைவலி நீங்கும்.

Updated On : 8 அக்டோபர் 2021, 6:04 pm IST
பகிர்:

மருதாணி இலைகளை அரைத்து நெற்றிப் பொட்டில் தடவ தலைவலி நீங்கும்.

பெண்கள் நகத்தில் அரைத்துப் பூசுவது அழகுக்கு மட்டுமின்றி, உடல் வெப்பத்தைத் தணிக்கவும், நோய்க் கிருமிகளை அழிக்கவும் பயன்படுகிறது.

பூக்களை நீரிலிட்டுக் காய்ச்சி கஷாய மாக்கி வடிகட்டி தலைக்குக் குளித்தால் தலைவலி நீங்கும்.

Advertisement

Advertisement

மருதாணி இலையின் சாறு எடுத்து தேங்காய் எண்ணெய்யில் கலந்து காய்ச்சித் தேய்த்துவர இளநரை நீங்கி தலைச் சூடு குறைந்து தலைமுடி. செழித்தும், நீண்டும், செம்பட்டையின்றியும் வளரும்.

இலைகளை எலுமிச்சைச்சாறுவிட்டு அரைத்து கை, கால், மூட்டு வலி, கீழ்வாத வலியின் போது தேய்க்க நல்ல குணம் தெரியும்.

ஒரு கைப்பிடி மருதாணி இலைகளுடன் எலுமிச்சைச் சாறுவிட்டு அரைத்து கால் பாதத்தில் தடவி 1 மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ பாத எரிச்சல் நீங்கும். பாதமும் மென்மையாக இருக்கும்.

ஒரு கைப்பிடி இலைகளோடு 1 தண்டு விரலி மஞ்சள் சேர்த்து அரைத்து அரிப்பு ஏற்படும் இடத்தில் இரவில் தடவி, காலையில் கழுவி வர, நமைச்சல், ஊறல் படிப்படியாகக் குறையும்.

இலைகளை அரைத்து நீண்ட நாள் ஆறாத புண் மீது வைத்துக் கட்ட விரைவில் ஆறும்.

ஒரு கைப்பிடி இலையை மஞ்சள், வசம்பு ஆகியவற்றுடன் சேர்த்து அரைத்து கால் ஆணிமேல் வைத்து வெற்றிலை வைத்து கட்டிவர 15 நாட்களில் கால் ஆணி மறையும்.

மருதாணிப் பூக்களை (புதியவை) தலையணையின் அடியில் வைத்துப் படுத்தால் தூக்கம் நன்றாக வரும்.

மருதாணியின் உலர்ந்த விதைகளை சாம்பிராணியுடன் சேர்த்து தணலில் புகையவிட்டால், பில்லி, சூன்யம், ஏவல், கண் திருஷ்டி நீங்கும். கொசு, விஷப் பூச்சிகள் அண்டாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments