அப்பம்
அரிசி, உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு, வெந்தயம் ஆகியவற்றைக் கழுவி ஒரு மணி நேரம் ஊறவிடவும். ஊறியதும் தேங்காயையும் சேர்த்து நைஸாக அரைக்கவும்.
தேவையானவை:
பச்சரிசி ஒரு கிண்ணம்
உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு தலா 2 மேசைக்கரண்டி
வெந்தயம் ஒரு தேக்கரண்டி
துருவிய வெல்லம் முக்கால் கிண்ணம்
துருவிய தேங்காய் கால் கிண்ணம்
ஏலக்காய்த் தூள் ஒரு தேக்கரண்டி
எண்ணெய் தேவையான அளவு.
செய்முறை:
Advertisement
Advertisement
அரிசி, உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு, வெந்தயம் ஆகியவற்றைக் கழுவி ஒரு மணி நேரம் ஊறவிடவும். ஊறியதும் தேங்காயையும் சேர்த்து நைஸாக அரைக்கவும்.
பிறகு, வெல்லம், ஏலக்காய்த் தூள் சேர்த்து அரைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் இந்த மாவைக் கரண்டியால் எடுத்து கொஞ்சம் ஊற்றி, ஒரு பக்கம் வெந்ததும், மறுபக்கம் திருப்பிப் போட்டு வெந்தவுடன் எண்ணெயை வடிய விட்டு எடுக்கவும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.