முகப்பு
மகளிர்மணி

அசோகா

சிறிதளவு நெய்யில் கோதுமை மாவை சிவக்க வறுத்து, பால் பவுடர் சேர்க்கவும். அடிகனமான வாணலியில் சர்க்கரையை சேர்த்து, சிறிதளவு நீர்

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:24 PM
பகிர்:

தேவையானவை:

பாசிப்பருப்பு (மசிய வேகவிட்டது) - 100 கிராம்
கோதுமை மாவு - 2  மேசைக்கரண்டி
சர்க்கரை - 200 கிராம்
நெய் - 100 கிராம்
ஏலக்காய்த் தூள் - ஒரு சிட்டிகை
வறுத்த முந்திரி, திராட்சை - சிறிதளவு
பால் பவுடர் - 3 மேசைக்கரண்டி

செய்முறை: 

சிறிதளவு நெய்யில் கோதுமை மாவை சிவக்க வறுத்து, பால் பவுடர் சேர்க்கவும். அடிகனமான வாணலியில் சர்க்கரையை சேர்த்து, சிறிதளவு நீர் விட்டு, கரைந்தவுடன் வேகவைத்த பாசிப்பருப்பு, கோதுமை மாவு கலவையைச் சேர்த்து நன்கு கிளறவும். ஒட்டாமல் இருக்க நெய் ஊற்றிக் கொண்டே கிளறவும். கலவை திரண்டு வரும்போது ஏலக்காய்த் தூள், வறுத்த முந்திரி, திராட்சை சேர்க்கவும். நன்கு கிளறி இறக்கிப் பரிமாறவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.