முகப்பு
மகளிர்மணி

சுண்டைக்காய் வற்றல்

சுண்டைக்காயை கழுவி குழவிக் கல்லினால் காய்களை நசுக்கி,  தண்ணீரில் போட்டு விதைகள் போக அலசி அலம்பி தேவையான உப்பு சேர்த்து ஜாடியில் ஊறப் போடவும்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:19 PM
பகிர்:

தேவையானவை;

சுண்டைக்காய்- அரை கிலோ
தயிர்-125 கிராம்
உப்பு- தேவையான அளவு

செய்முறை:

சுண்டைக்காயை கழுவி குழவிக் கல்லினால் காய்களை நசுக்கி,  தண்ணீரில் போட்டு விதைகள் போக அலசி அலம்பி தேவையான உப்பு சேர்த்து ஜாடியில் ஊறப் போடவும். ஒரு வாரத்துக்குப் பின்னர் எடுத்துத் தயிரில் தேவையான உப்பு சேர்த்து காயைப் பிழிந்து கலந்து ஒரு கற்சட்டியில் ஒரு நாள் அழுக்கி வைத்திருக்க வேண்டும். அடுத்த நாள் வெயிலில் காய வைத்து நன்றாகக் காய்த்ததும் சேமித்துகொள்ள வேண்டும்.  உப்பில் ஊறும்போது எடுத்து எண்ணெயில் வதக்கி ஊறுகாயாகச் செய்யலாம். வற்றலான  பின்னர் குழம்பிலும் போடலாம்.

முழு கட்டுரையைப் படிக்க →