தேவையான பொருள்கள்:
அருநெல்லிக்காய்- 20
வரமிளகாய்- 3
தயிர்- 1 கிண்ணம்
கொத்தமல்லி- 1 மேசைக்கரண்டி
உப்பு, எண்ணெய்- தேவையான அளவு
தாளிக்க: கடுகு- அரை தேக்கரண்டி
வரமிளகாய்- 1
பெருங்காயம்- 2 சிட்டிகை
செய்முறை:
நெல்லிக்காயைத் துருவி பச்சை மிளகாயுடன் அரைக்கவும். தயிரில் உப்பு கலந்து வைக்கவும்.
வாணலியில் சிறிது எண்ணெய்விட்டு, கடுகு, வரமிளகாய், கறிவேப்பிலையைத் தாளித்து அரைத்த நெல்லிக்காய் விழுது, உப்பு சேர்த்து வதக்கி ஆறியதும் தயிரில் கொட்டி கலந்து பரிமாறவும். கொத்தமல்லி இலை தூவி, அலங்கரிக்கவும். சாதம், சப்பாத்திக்கு நன்றாக இருக்கும்.
கோ.இனியா, கிருஷ்ணகிரி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.