FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மகளிர்மணி

சமையல் குறிப்புகள்...

முட்டைக்கோஸை சமைக்கும்போது ஒரு துண்டு இஞ்சியையும் சேர்த்து சமைத்தால், அதன் மணம் மாறாமல் இருக்கும்.

Updated On : 28 ஜனவரி 2024, 12:00 am IST
பகிர்:

முட்டைக்கோஸை சமைக்கும்போது ஒரு துண்டு இஞ்சியையும் சேர்த்து சமைத்தால், அதன் மணம் மாறாமல் இருக்கும்.

கொத்துமல்லி இலைகளை நன்கு ஆய்ந்து சுத்தமாகத் தண்ணீரில் அலசி காய வைத்து, காற்றுப் புகாத டப்பாவில் போட்டு வைத்தால், அதிக நாள்கள் கெட்டுப் போகாது.

தேங்காய்க்குப் பதிலாக, வேர்க்கடலை, முந்திரி போட்டு சட்னி செய்தால் சுவையாக இருக்கும்.

Advertisement

Advertisement

துவரம் பருப்பை வேக வைக்கும்போது, ஒரு தேக்கரண்டி வெந்தயத்தையும் சேர்த்தால் சாம்பார் இரவு வரை கெடாமல் இருக்கும்.

தக்காளிப் பழங்களை மிக்ஸியில் அரைத்து சாம்பாரில் கலந்தால், சாம்பார் சிவப்பாகவும் ருசியாகவும் இருக்கும்.

பொடியாக நறுக்கிய பாகற்காயோடு சீரகம், மிளகு, உப்பு கலந்து சூப் செய்யலாம்.

வெந்த உருளைக் கிழங்கின் மேல் பயத்தம் மாவை பூசி செய்யும் பொரியல் பிரமாதமாக இருக்கும்.

அப்பம் செய்யும்போது, அரிசி மாவுடன் சிறிதளவு வெண்ணெய் சேர்த்து செய்தால், அப்பம் மொறுமொறுவென்று நல்ல சுவையாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments