மெதுவடை சுவை கூட...!
உளுந்துவடையின் சுவையை இரட்டிப்பாக்கும் சிறந்த டிப்ஸ்!
உளுந்துவடை தயாரிக்கும்போது, அரைத்த மாவுடன் பொடியாக அரிந்த புதினா கீரையை கலந்து வடை சுட்டு எடுக்கவும். சுவை இரண்டு மடங்கு அதிகரிப்பதுடன் மணம் நன்றாக இருக்கும்.
உளுந்து வடைக்கு மாவு அரைத்த உடனே நன்கு காய்ந்த எண்ணெயில் வடை சுட்டு எடுக்க வேண்டும். இதனால் வடை அதிக எண்ணெய் உறிஞ்சாது. சுவை தூக்கலாக இருக்கும்.
உளுந்து வடைக்கு மாவு தயாரிக்கும்போது, கொஞ்சம் இஞ்சி விழுதும் கலந்தால் நன்கு பொன்னிறமாக வடையை சுட்டு எடுக்க முடியும். சுவையும் தனி.
Advertisement
Advertisement