தேங்காய்ப் பால் ஆப்பம்
அரிசி, வெந்தயம், உளுந்தம் பருப்பு எல்லாம் ஒன்றாக ஊறவைத்து இரண்டு மணி நேரம் கழித்து, களைந்து மைய அரைக்க வேண்டும்.
தேவையான பொருள்கள்:
புழுங்கல் அரிசி- 300 கிராம்
வெந்தயம்- 2 மேசைக்கரண்டி
Advertisement
Advertisement
உளுந்தம் பருப்பு- 100 கிராம்
தேங்காய்ப் பால்- நூறு மில்லி
உப்பு, எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை:
அரிசி, வெந்தயம், உளுந்தம் பருப்பு எல்லாம் ஒன்றாக ஊறவைத்து இரண்டு மணி நேரம் கழித்து, களைந்து மைய அரைக்க வேண்டும். தேங்காயைத் துருவி பால் எடுத்துக் கொள்ள வேண்டும். அரைத்த மாவுடன் உப்பு, தேங்காய்ப் பால் சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும். ஆப்பக் கடாயில் மாவை பரவலாக ஊற வைத்து, அடுப்பில் குறைந்த அளவு தீயில் வைத்து, சிறிது எண்ணெய்விட்டு மூடியால் மூட வைத்து, வேகவிட வேண்டும். திருப்பிப் போடக் கூடாது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.