மகளிர்மணி

முருங்கைக்காய் ஊறுகாய்

முருங்கைக் காயை இரண்டங்குலத் துண்டுகளாக நறுக்கவும். மாங்காயை ஓரங்குலத்தூண்டுகளாக நறுக்கவும்.

விசாலாட்சி

தேவையானவை:

முருங்கைக்காய் - அரை கிலோ

மாங்காய் - கால் கிலோ

மிளகாய்த்தூள் - கால் கிலோ

பெருங்காயத்தூள் - தேவையான அளவு

வறுத்த வெந்தயத்தூள் - அரை தேக்கரண்டி

நல்லெண்ணெய் - கால் லிட்டர்

கல் உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முருங்கைக் காயை இரண்டங்குலத் துண்டுகளாக நறுக்கவும். மாங்காயை ஓரங்குலத்தூண்டுகளாக நறுக்கவும். சுத்தமான பாத்திரத்தில் இரண்டையும் போட்டு, உப்பு போட்டு கலக்கி வெயிலில் வைக்கவேண்டும்.

அடிக்கடி குலுக்கி உப்பு கரையவும் கலக்கவேண்டும். ஒரு வாரத்திற்குப் பிறகு மிளகாய், பெருங்காயம், வெந்தயத்தூள் கலந்து, அதன் மேல் சூடாக்கிய எண்ணெயை ஊற்றி (ஊறுகாயின் மீது எண்ணெய் மிதக்கும்படி இருக்கவேண்டும்) மூடிவைக்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3 மணிநேரத்தில் உருவாகும் டிட்வா புயல்! சென்னைக்கு 730 கி.மீ. தொலைவில்...

தவெகவில் செங்கோட்டையன்! இபிஎஸ்ஸின் பதில் என்ன தெரியுமா?

அனுபமாவின் லாக்டவுன் டிரைலர்!

காவல்துறை-வழக்குரைஞர்கள் மோதல்: ரத்து செய்து உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

பரங்கிமலை மாணவி கொலை: குற்றவாளி சதீஷின் மரண தண்டனை குறைப்பு!

SCROLL FOR NEXT