தேவையானவை:
முருங்கைக்காய் - அரை கிலோ
மாங்காய் - கால் கிலோ
மிளகாய்த்தூள் - கால் கிலோ
பெருங்காயத்தூள் - தேவையான அளவு
வறுத்த வெந்தயத்தூள் - அரை தேக்கரண்டி
நல்லெண்ணெய் - கால் லிட்டர்
கல் உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முருங்கைக் காயை இரண்டங்குலத் துண்டுகளாக நறுக்கவும். மாங்காயை ஓரங்குலத்தூண்டுகளாக நறுக்கவும். சுத்தமான பாத்திரத்தில் இரண்டையும் போட்டு, உப்பு போட்டு கலக்கி வெயிலில் வைக்கவேண்டும்.
அடிக்கடி குலுக்கி உப்பு கரையவும் கலக்கவேண்டும். ஒரு வாரத்திற்குப் பிறகு மிளகாய், பெருங்காயம், வெந்தயத்தூள் கலந்து, அதன் மேல் சூடாக்கிய எண்ணெயை ஊற்றி (ஊறுகாயின் மீது எண்ணெய் மிதக்கும்படி இருக்கவேண்டும்) மூடிவைக்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.