மாம்பழச் சாறு பொங்கல்
தேவையான பொருள்கள்:
பழுத்த மாம்பழங்கள் - 6
அரிசி- அரை கிலோ
Advertisement
Advertisement
நெய், சர்க்கரை - தலா 250 கிராம்
முந்திரிப் பருப்பு, திராட்சை -தலா 20
ஏலக்காய்த் தூள்- 2 தேக்கரண்டி
செய்முறை:
அரிசியை சுத்தம் செய்து தண்ணீரில் வேகவைத்து வடித்துக்கொள்ள வேண்டும். திராட்சை, முந்திரி ஆகியவற்றை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு மாம்பழத்தைச் சாறு பிழிந்து, சர்க்கரையுடன் ஏலக்காய்ப் பொடி, முந்திரிப் பருப்பு, திராட்சையையும் சேர்த்து, வடித்த சாதத்துடன் நெய்விட்டுக் கலந்து மேலும் கீழுமாக ஒன்றாகக் கிளறி இறக்கவேண்டும்.
ஆர்.ஜெயலட்சுமி, திருநெல்வேலி.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.