சமையல் டிப்ஸ்...
தக்காளி சூப் செய்து நீண்டநேரம் வைத்திருந்தால் அது அமிலத்தன்மை உடையதாக மாறிவிடும். அதைத் தவிர்க்க சூப் இளஞ்சூடாக இருக்கும் போதே ஒரு சிட்டிகை சோடா மாவு சேர்க்க வேண்டும்.
தக்காளி சூப் செய்து நீண்டநேரம் வைத்திருந்தால் அது அமிலத்தன்மை உடையதாக மாறிவிடும். அதைத் தவிர்க்க சூப் இளஞ்சூடாக இருக்கும் போதே ஒரு சிட்டிகை சோடா மாவு சேர்க்க வேண்டும்.
மெதுவடைக்கு உளுந்துடன் சிறிது துவரம்பருப்பு சேர்த்து ஊறப்போட்டால் மெதுவடை சுவை மிகுந்து இருக்கும்.
தயிர்ப்பச்சடி நீர்த்துப்போய் விட்டால், சிறிது நிலக்கடலையை வறுத்து, நைசாக பொடி செய்து கலந்துவிடுங்கள். இதனால் பச்சடி கெட்டியாவதோடு சுவையும் சத்தும் கூடும்.