'டாப் 1' புகைப்படம் எடுத்த பெண்...
உலகப் புகைப்படக் கலைஞர்கள் சங்கத்தினர் ஆண்டுதோறும் சிறந்த புகைப்படக் கலைஞர்களைத் தேர்வு செய்கின்றனர்.
உலகப் புகைப்படக் கலைஞர்கள் சங்கத்தினர் ஆண்டுதோறும் சிறந்த புகைப்படக் கலைஞர்களைத் தேர்வு செய்கின்றனர். அதன்படி, சுவீடன் பெண் தெரேஸ் தேர்வாகியுள்ளார்.
முன்னதாக, புகைப்படக்கலைஞர்களிடம் 2025-ஆம் ஆண்டின் சிறந்த புகைப்படங்கள் கேட்கப்பட்டிருந்தது. 28 பிரிவுகளில் 5,700-க்கும் அதிகமானோர் புகைப்படங்களை அனுப்பியிருந்தனர்.
இறுதியில் திறமை, கதை ஆழம், செயல்படுத்துதலை வெளிப்படுத்தும் தனித்துவமான, துணிச்சலான அணுகுமுறையின்படி சுவீடனின் பெண் கலைஞர் தெரேஸ் ஆஸ்ப்ளண்ட் தேர்வு செய்யப்பட்டார்.
Advertisement
Advertisement
அவர் எடுத்த இளம்பறவைகளின் கிளை தேர்வு செய்யப்பட்டது. இரண்டாவதாக நார்வேயின் செசிலிஸ்டு டல் எடுத்த புகைப்படமும், மூன்றாவதாக இங்கிலாந்தின் டெர்ரிடோனல்லி எடுத்த புகைப்படமும் தேர்ந்தெடுக்கப்பட்டன. இதுதவிர, ஒவ்வொரு பிரிவிலும் தங்க விருதுகள் பெற்ற படங்கள் முதலில் தேர்வு செய்யப்பட்டு, அதிலிருந்து சிறந்தவை தேர்வு செய்யப்பட்டன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.