ஆடல் கலையை...
தான் கற்ற பரதக் கலையை கிராமப்புற மாணவ, மாணவிகளுக்கும் கற்றுத் தருவதோடு, அரங்கேற்றமும் செய்து அவர்களின் திறமையை வெளிப்படுத்தி வருகிறார் நாற்பத்து இரண்டு வயதான வி.ஜாஸ்மின்.
தான் கற்ற பரதக் கலையை கிராமப்புற மாணவ, மாணவிகளுக்கும் கற்றுத் தருவதோடு, அரங்கேற்றமும் செய்து அவர்களின் திறமையை வெளிப்படுத்தி வருகிறார் நாற்பத்து இரண்டு வயதான வி.ஜாஸ்மின்.
நாமக்கல் மாவட்டத்துக்கு உள்பட்ட சேந்தமங்கலம் அருகே காளப்ப நாயக்கன்பட்டியைச் சேர்ந்த அவரிடம் பேசியபோது:
'தமிழ்நாட்டின் பாரம்பரியக் கலைகளில் ஒன்று பரதம். இதனை கற்றுக் கொள்வதில் ஆண்களைக் காட்டிலும் பெண்கள்தான் மிகுந்த ஆர்வம் கொள்வர். அன்று முதல் இன்று வரை தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் பரதக் கலைக்கு அதிக முக்கியத்துவம் உண்டு.
Advertisement
Advertisement
நான் பிறந்தது கேரள மாநிலத்துக்கு உள்பட்ட பாலக்காடு. தந்தை மர வியாபாரம் செய்து வந்த நிலையில் பிழைப்புக்காக நாங்கள் எங்கள் குடும்பத்தோடு இங்கு வந்து, சேந்தமங்கலம் அருகே காளப்பநாயக்கன்பட்டியில் வசித்தோம். எனது ஆறாம் வயதில் பரதக் கலை மீது ஆர்வம் ஏற்பட்டது. கரூரைச் சேர்ந்த சிவலோகநாதனிடம் பரதம் கற்றேன்.
பின்னர், என்னைப்போல் இந்தக் கலையை ஆர்வமுடன் கற்க விரும்பும் கிராமப்புற மாணவிகளுக்கு பரதத்தை கற்றுக் கொடுக்கத் தொடங்கினேன்.
தொடக்கத்தில் சிலரே வந்த நிலையில், தற்போது நூற்றுக்கும் மேற்பட்டோர் கற்றுவருகின்றனர். மாணவிகள் ஆர்வமுடன் பரதம் கற்பது மட்டுமின்றி, தங்களது திறமையை வெளிப்படுத்துகின்றனர். பரதநாட்டியம் என்பது அனைவரும் கற்கலாம்.
தற்போதைய நிலையில் ஆறு வயது முதல் முப்பது வயது வரையிலான பெண்கள் என்னிடம் பரதம் கற்று வருகின்றனர். நாட்டியக் கலைக்கு வயது தடையில்லை'' என்கிறார் ஜாஸ்மின்.