முகப்பு
மகளிர்மணி

விதம் விதமா ரசம் செய்யலாம்...

ரசத்துக்கு புளி கரைக்கும் போது சிறிது வெல்லம் சேர்த்துக் கரைத்தால் ரசம் தனி ருசியுடன் இருக்கும்.

Updated On : 28 மார்ச், 2026 at 10:32 PM
ரசம்
பகிர்:

ஆர். கீதா, கொச்சி

ரசத்துக்கு புளி கரைக்கும் போது சிறிது வெல்லம் சேர்த்துக் கரைத்தால் ரசம் தனி ருசியுடன் இருக்கும்.

ரசம் தாளிக்கும்போது தண்ணீரில் பெருங்காயம், கறிவேப்பிலையைப் போடாமல் தாளிக்கும் எண்ணெயில் போட்டால் ரசம் நல்ல மணமாகவும், ருசியாகவும் இருக்கும்.

ரசத்தில் சேர்க்க கொத்துமல்லி இல்லையென்றால் தனியாவை நெய்யில் வறுத்துப் பொடி செய்து போடலாம். வாசனையாக இருக்கும்.

 தக்காளியை ரசத்துக்கு அரிந்து போட்டால் வீணாக நேரிடலாம். மிக்ஸியின் வைப்பரில் தக்காளி, கொத்துமல்லி, கறிவேப்பிலை போட்டு ஒரு சுற்று சுற்றி ரசம் செய்தால் மணமான, சுவையான ரசம் தயார்.

தேங்காய்த்தண்ணீரை வீணாக்காமல் ரசத்தில் சேர்த்தால் ரசம் மேலும் சுவையாக இருக்கும்.

ரசம் தயாரிக்கும் போது சிறிதளவு இஞ்சி சேருங்கள். இப்படிச் செய்யும் ரசத்தின் சுவையே அலாதி தான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.