இந்திய சுதந்திரச் சுடர்கள்!
மகாத்மா காந்தி, அம்பேத்கார்!மனிதருள் மாணிக்கம் நம் நேரு!பகத்சிங், வாஞ்சி, பாரதியார்!பாரதம் காக்க எழுந்தார்கள்!
மகாத்மா காந்தி, அம்பேத்கார்!
மனிதருள் மாணிக்கம் நம் நேரு!
பகத்சிங், வாஞ்சி, பாரதியார்!
Advertisement
Advertisement
பாரதம் காக்க எழுந்தார்கள்!
கப்பல் ஓட்டினார் வ.உ.சி!
கர்ஜித் தெழுந்தார் கட்டபொம்மன்!
அப்புறப் பட்டார் அன்னியரே!
அரவிந்தர், நேதாஜி முன் நின்றார்!
கோகலே, குமரன், வ.வே.சு!
கும்பெனிப் படைக்கு எதிரானார்!
பூலித் தேவன், மருது வீரர்கள்
பொங்கி எழுந்தார் முதலாக!
செண்பகராமன், சந்திரபோஸ்
தீரர் சத்தியமூர்த்தியவர்!
செம்மல் காம ராஜரெனச்
சுதந்திரச் சுடர்கள் பலருண்டு!
நெஞ்சை விட்டு விலகவில்லை!
நேற்றைய தியாகம் அகலவில்லை!
இந்திய விடுதலை தியாகச்சுடர்கள்
எழுச்சிக் காவியம் அறிவோமே!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.