முகப்பு
சிறுவர்மணி

தாய் பொன்மொழிகள்

மனித வாழ்க்கையை நமக்குத் தந்தவர்களும் அதை மணம் பெறச் செய்பவர்களும் தாயும் பெண்களும்தான்.

Updated On : 24 ஜனவரி, 2024 at 5:12 PM
பகிர்:
  • மனித வாழ்க்கையை நமக்குத் தந்தவர்களும் அதை மணம் பெறச் செய்பவர்களும் தாயும் பெண்களும்தான். - போவி

  • தாயின் இதயம்தான் குழந்தையின் முதல் பள்ளிக்கூடம். - பிச்சர்

  • ஒரு சிறந்த தாய் நூறு ஆசிரியர்களுக்குச் சமமாவாள். - ஹெர்பர்ட்

  • அறிவின் தாயகமாய் அருள் நிறைந்த உள்ளமாய் இருப்பவள் பெண். - ஜெயகாந்தன்

  • எந்த வீட்டில் தாய் மதிக்கப்படுகிறாளோ அங்கு இறைவனின் அருள் இருக்கும்! - மனு

  • கடவுள் எங்கும் நிறைந்திருக்க முடியாது என்பதால்தான் தாய்மார்களைப் படைத்துள்ளான். - ஜார்ஜ் எலியட்

  • சமூகத்தின் எதிர்காலம் தாய்மார்களின் கைகளில் உள்ளது. - டிபூ போர்ட்

  • வாழ்வில் நமக்குச் சொந்தம் என்று சொல்லக் கூடிய சொத்து தாயும் அவளது பாசமுமே! - கோல்டன்

  • இருப்பது ஒரு பிடி அன்னமானாலும் தனக்கென இல்லாது பிள்ளைக்கு ஊட்டி மகிழ்பவளே தாய்! - கண்ணதாசன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.