பொன்மொழிகள்!
உங்கள் குறைகளைச் சுட்டிக்காட்டு பவரே உங்கள் வாழ்வின் ஏணிப்படியாவார். - ஸ்ரீ அரவிந்தர்
- உங்கள் குறைகளைச் சுட்டிக்காட்டு பவரே உங்கள் வாழ்வின் ஏணிப்படியாவார். - ஸ்ரீ அரவிந்தர்
- முயற்சியை ஒருவன் நிறுத்திவிடும் அதே விநாடி அவனது சக்தி அவனை விட்டு விலகிவிடுகிறது! - எமர்சன்
- வணங்கத் தொடங்கினால் வளரவும் தொடங்குவோம்! - கோல்ட்ரிட்ஜ்
- செயல்களைக் கடினமாக்குவது சோம்பல்!.... எளிமையாக்குவது சுறுசுறுப்பு! - பெஞ்சமின் ஃப்ராங்க்ளின்
- வளமாக வாழும்போது நண்பர்கள் உன்னை அறிவர். வறுமையிலோ நண்பர்களை நீ அறிவாய்! - ரஸ்கின்
- நெருப்பு விறகைத் தின்றுவிடுவது போன்று பொறாமை நன்மைகளைத் தின்றுவிடுகிறது! - நபிகள் நாயகம்
- மனிதன் வெற்றியடைய தூய்மை, பொறுமை, விடாமுயற்சியுடன் அன்பும் இருந்தாக வேண்டும். - சுவாமி விவேகானந்தர்
- இடையறாத பிரார்த்தனை இறைவனின் காதுகளில் நிச்சயம் விழும்! - கர்மயோகி
- நகைச்சுவை உணர்ச்சி இல்லாவிடில் வாழ்க்கை பெருஞ்சுமை ஆகிவிடும். - பெர்னார்ட் ஷா
- தூக்கி எறிகிற குதிரையைவிட சுமக்கிற கழுதை எவ்வளவோ மேல். - ரிச்சர்ட் ஸ்டீலி