கதைப் பாடல்: பட்டாம்பூச்சியின் உதவி
கட்டை விரலின் அளவுடைய கண்ணைக் கவரும் தேன்சிட்டுபொட்டு அழகின் தோட்டத்தில் பறந்து பறந்து சுற்றிவரும்
கட்டை விரலின் அளவுடைய
கண்ணைக் கவரும் தேன்சிட்டு
பொட்டு அழகின் தோட்டத்தில்
பறந்து பறந்து சுற்றிவரும்
நெட்டை மரத்தின் பூக்களிலே
நீட்டு அலகால் தேன்குடிக்கும்
வட்ட நிலாபோல் தனித்திருக்கும்
வம்பு செய்ய நினைக்காது
கெட்ட மனத்து அணில் ஒன்று
கண்டு அதனை மிரட்டியது
""கிட்ட வந்தால் கொன்றிடுவேன்''
கோபக் குரலில் விரட்டியது
Advertisement
Advertisement
வெட்டி வீழ்ந்த மரக்கிளைபோல்
வாட்டம் கொண்டது தேன்சிட்டு
பட்டாம் பூச்சி நண்பனிடம்
பயந்த நிலையைத் சொன்னதுவே
""சிட்டே உனது தலைமேலே
சிறிது நேரம் அமர்ந்திடுவேன்
வெட்டும் சொல்லின் அணில்பக்கம்
வீர மாய்ப்போ'' என்றதுவே
ஒட்டி இணைந்த அதன் சிறகில்
ஓங்கித் திகழ்ந்த கண்வட்டம்
கெட்ட அணில்தான் கண்டதுமே
கலங்கி நடுங்கி ஓடியதே!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.