முகப்பு
சிறுவர்மணி

தெரியுமா?

தீயணைப்பு வீரர்கள் பயன்படுத்தும் காலணிகள், கையுறைகள், தலைக்கவசம் ஆகியன ஆஸ்பெட்டால் இழைகளால் ஆனவை.  இவை நெருப்பில் எரியாது.

Updated On : 4 பிப்ரவரி 2024, 12:00 am IST
பகிர்:


தீயணைப்பு வீரர்கள் பயன்படுத்தும் காலணிகள், கையுறைகள், தலைக்கவசம் ஆகியன ஆஸ்பெட்டால் இழைகளால் ஆனவை.  இவை நெருப்பில் எரியாது. மின்சாரத்தைக் கடத்தாது. 2 ஆயிரம் முதல் மூன்று ஆயிரம் சென்டிகிரேடு வரை வெப்பத்தைத் தாங்கக் கூடியவை.

உலகிலேயே சிறிய கரன்சி நோட்டு ஹாங்காங் அரசு வெளியிட்ட 1 சென்ட் மதிப்புள்ள நோட்டுதான். அது ஒரு பக்கத்தில் அச்சாகிய நோட்டு அடுத்த பக்கம் வெற்றிடமாக இருந்தது.

ஒரு ஆண்டு ஆணாகவும், அடுத்த ஆண்டு பெண்ணாகவும் மாறும் உயிரினம்தான் ஈரிதழ் சிட்டு.

Advertisement

Advertisement

பண நோட்டுகளில் வரிசை எண் அச்சாகியிருக்கும்.  வரிசை எண்களே இல்லாத கரன்சி நோட்டுகளையும் வெளியிட்டிருக்கின்றனர். 

பதக்கம் விருது வழங்கும் முறையை அறிமுகப்படுத்தியவர்கள் எகிப்து மன்னர்கள்தான். 

சிகாகோவில் உள்ள மத்திய மருத்துவ நிலையம்தான் உலகிலேயே மிகப் பெரிய மருத்துவ நிலையம். இங்கு 5,600 படுக்கைகள் உள்ளன.

மகாலெஷ்மி சுப்பிரமணியன்,
காரைக்கால்.

35 முறை ஆஸ்கர் விருதுகளைப் பெற்றவர் வால்ட் டிஸ்னி.

லூயி என்ற பெயரில் பதினெட்டு மன்னர்கள் பிரான்சு நாட்டை ஆண்டுள்ளனர்.

சர்க்கரை நோய் உள்ள நோயாளிக்கு எந்த உறுப்பும் சரியாக இயங்காது.

பிரெஞ்சு மொழி 24 நாடுகளில் அரசு மொழியாக உள்ளது.

வட துருவத்தில் நிலம் இல்லை. தென் துருவத்தில் நீர் இல்லை.

சூரியன் அஸ்தமனத்துக்கு முன் சிவப்பாகத் தோன்றும். ஆனால் அது பச்சையாகத் தோன்றுவது அண்டார்டிகாவில் மட்டும்தான்.

ஒரு குதிரைத் திறன் என்பது 550 பவுண்டு எடையுள்ள ஒரு பொருளை ஒரு விநாடியில் ஒரு அடி உயரத்தில் தூக்குவதாகும்.

கே.பிரபாவதி,
மேலகிருஷ்ணன்புதூர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments