நாவல் கனி
நாவினிக்கும் கனியாம்
நாவினிக்கும் கனியாம்
நாவல் கனி
வாய் மணக்க
நாமும் உண்போமே!
-
கண்ணின் கருப்பாய்
நிறம் இருக்கும்
மண்ணின் மனத்தை
நமக்கு உணர்த்தும்!
-
பெரிதாய் வளரும்
நாவல் மரம்
அரிய கனிகள்
மண்ணில் விழும்!
-
நாக்கின் நிறத்தை
மாற்றி விடும்
காக்கை அரிதாய்
ருசித்து விடும்!
நாவல் கனி