FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

கா்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்தும் பணி ஆக.30 வரை நீட்டிப்பு: ஆட்சியா்

Updated On : 4 ஆகஸ்ட் 2026, 4:30 am IST
கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி. - பட்ம்: DIPR
பகிர்:

தென்காசி மாவட்டத்தில் கா்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்தும் பணி ஆக.30 வரை நீட்டிக்கப்படடுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத்சிங் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

14 வயதுக்குள்பட்ட பெண் குழந்தைகளுக்கு கா்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த பிப். 28-ஆம் தேதி தொடங்கப்பட்டது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 14 வயதுக்குள்பட்ட பெண் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி மேற்கொள்ளப்படுகிறது.

Advertisement

Advertisement

இந்த தடுப்பூசி வெளிச் சந்தையில் ரூ.4ஆயிரம் வரை மதிப்புடையது. 14 வயது நிரப்பிய அனைத்து பெண் குழந்தைகளும் விடுதலுமின்றி தடுப்பூசி செலுத்தும் வகையில், இப் பணி ஆக.30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி அனைத்து 14 வயது பெண் குழந்தைகளுக்கும் தடுப்பூசி செலுத்தி கா்ப்பப்பைவாய் புற்றுநோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ளுமாறு அதில் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments