எதிர்பாராத தருணம்...
நடிகர் ரஜினிகாந்தும் நடிகை கயாடு லோஹரும் விமானப் பயணத்தின்போது அண்மையில் சந்தித்துக் கொண்டனர்.
நடிகர் ரஜினிகாந்தும் நடிகை கயாடு லோஹரும் விமானப் பயணத்தின்போது அண்மையில் சந்தித்துக் கொண்டனர். இதுதொடர்பாக கயாடு லோஹர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்து, 'தான் இன்னும் கனவுதான் கண்டுகொண்டிருக்கிறேன் என்று நினைக்கிறேன்.
அவருடைய மிகப் பெரிய ரசிகராக இருந்து, எதிர்பாராதவிதமாக ஒரு விமானத்தில் ரஜினிகாந்த் சாருக்கு பக்கத்து சீட்டிலேயே அமரும் வாய்ப்புக் கிடைத்தது. இது நம்ப முடியாத, எதிர்பாராத தருணம். என் நாளே இனிமையாகிவிட்டது.
என்றாவது ஒரு நாள் அவருடன் சேர்ந்து திரையைப் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கும் என்று நம்புகிறேன். அவருக்கு அருகில் நான் உருளைக்கிழங்குப் போல் இருக்கிறேன்' எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.