முகப்பு
தமிழ்மணி

ஆசிரிய மேகம்!

மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் பாடம் கேட்டுத் தமிழ் மொழியில் வல்லுநரானவர் தேவராசப் பிள்ளை. இவர் பல நூல்களை இயற்றியுள்ளார்.

பகிர்:

மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் பாடம் கேட்டுத் தமிழ் மொழியில் வல்லுநரானவர் தேவராசப் பிள்ளை. இவர் பல நூல்களை இயற்றியுள்ளார். அவற்றுள் ஒன்று குசேலோபாக்கியானம். இந்நூலின் தொடக்கத்தில் கடவுள் வணக்கம் முதலிய கூறி, புதுமையாக ஆசிரிய வணக்கமும்
கூறுகிறார்.
ஆசிரிய வணக்கப் பாடலில், "திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை திரிசிராமலையில் வளர்ந்து கலைக்கடலை உண்டு, தனது மனமாகிய மலையில் தமிழ் மழையைப் போதுமளவு பொழிந்த அறிவாகிய பொய்கையை நிரப்பிய மீனாட்சி சுந்தரமாகிய மேகத்தை விரும்பி நாம் வாழ்வோம்' என உருவக அணியில் வைத்துப் பாடியுள்ளார்.
இப்பாடலில் மனத்தை மலையாகவும்; தமிழை மழையாகவும் அறிவைப் பொய்கையாகவும்; ஆசிரியப் பிரானை மேகமாகவும் உருவகம் செய்துள்ளது படித்து இன்புறத்தக்கது.

சீராருந் திரிசிரா மலையின்வளர்ந்
தெக்காலுஞ் சிறப் பினோங்கும்
ஏராருங் கலைக்கடன் முற்றுண்டாங்கு
நின்றெழீஇ யென்வி வேக
வாராருந் தடம்நிரம்ப மனப்பறம்பின்
இனியதமிழ் மாரி பெய்த
பேராரு மீனாட்சி சுந்தரதே
சிகமுகிலைப் பேணி வாழ்வாம்!

முழு கட்டுரையைப் படிக்க →