முகப்பு
தமிழ்மணி

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

காட்டிலிருந்து தவம் செய்யும் அமணர்க்கும், ஓட்டால் வரும் பயன் எல்லாம் பலர் உறையும் ஊரினிடத்ததாகவே விளங்கும்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:37 AM
பகிர்:

தாரேற்ற நீண்மார்பின் தம்மிறைவன் நோக்கியக்கால்
போரேற்றும் என்பார் பொதுவாக்கல் வேண்டுமோ? 
யார்மேற்றாக் கொள்ளினும் கொண்டீக் காணுங்கால் 
ஊர்மேற்றதாம் அமணர்க்கு ஓடு. (பாடல்-231)

காட்டிலிருந்து தவம் செய்யும் அமணர்க்கும், ஓட்டால் வரும் பயன் எல்லாம் பலர் உறையும் ஊரினிடத்ததாகவே விளங்கும். அரசன் குறித்து நோக்கியபோதே, போரை ஏற்றுச் செல்வோம்' எனத் தறுகண்மை பேசுபவர்கள்,  "அவன் பொதுவாகவே நோக்கினான்; நம்மைக் குறிப்பிட்டு நோக்கவில்லையே' என்று நினைக்காமல், யாரை அவன் பார்த்தாலும், அதனைத் தம்மேலேயாக நோக்கினான் என்று கருதி, அச்செயலை முடிப்பதே சிறப்பு. "ஊர் மேற்றதாம் அமணர்க்கு ஓடு' என்பது பழமொழி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.