முன்றுறையரையனார்
பாம்பானது தன் இனத்தை விட்டு விலகித் தனியாக இருப்பினும், இளைத்த பாம்பு என்று யாரும் இகழ்ந்து தீண்டார்.
சீர்த் தகு மன்னர் சிறந்த அனைத்தும் கெட்டாலும்
நேர்த்து உரைத்து எள்ளார், நிலை நோக்கி, - சீர்த்த
கிளை இன்றிப் போஒய்த் தனித்து ஆயக் கண்ணும்
இளைது என்று பாம்பு இகழ்வார் இல். (பாடல்: 383)
பாம்பானது தன் இனத்தை விட்டு விலகித் தனியாக இருப்பினும், இளைத்த பாம்பு என்று யாரும் இகழ்ந்து தீண்டார். அதுபோல ஒரு காலத்தில் சிறப்புடை மன்னராக விளங்கிப் பிற்காலத்து அவற்றை இழந்து இருந்தாலும் அவரைப் பற்றி இகழ் உரையை வெளியே சொல்லுதல் ஆகாது.