வயதை ஆராய்தல்
பிராயம் எவ்வளவு ஆகியுள்ளது! பல்லின் தன்மை எப்படியுள்ளது? இரண்டு கவளமும் உண்டு வீட்டீரோ?
பருவம் எனைத்துள? பல்லின்பால் ஏனை?
இருசிகையும் உண்டீரோ? என்று - வரிசையால்
உண்ணாட்டங் கொள்ளப் படுதலால் யாக்கைக்கோள்
Advertisement
எண்ணார், அறிவுடையார்.
(பாடல் 18 அதிகாரம் இளமை நிலையாமை)
"பிராயம் எவ்வளவு ஆகியுள்ளது! பல்லின் தன்மை எப்படியுள்ளது? இரண்டு கவளமும் உண்டு வீட்டீரோ?' என்று வயது முதிர்ச்சியினை முறைமையால் உள்ளத்திலே எண்ணி ஆராய்தலைச் செய்யப்படுவதனால், தேகத்தின் வலிமையைப் பற்றி எண்ணி, அறிவு உடையவர்கள் அளவுக்குமீறி மகிழ மாட்டார்கள்.