பேதை மாக்களிடம் எதையும் சொல்ல வேண்டாம்
மாலையினைப் போன்ற தோற்றத்துடன் வீழ்கின்ற அருவிகளை உடைய, குளிர்ச்சி பொருந்திய மலைகளையுடைய நல்ல நாட்டிற்கு உரியவனே!
கோதை அருவிக் குளிர்வரை நன்னாட!
பேதையோ டியாதும் உரையற்க!-பேதை,
உரைக்கிற், சிதைந்துரைக்கும்; ஒல்லும் வகையான்,
Advertisement
Advertisement
வழுக்கிக் கழிதலே நன்று.
(பாடல் 71 அதிகாரம்: பொறை உடைமை)
மாலையினைப் போன்ற தோற்றத்துடன் வீழ்கின்ற அருவிகளை உடைய, குளிர்ச்சி பொருந்திய மலைகளையுடைய நல்ல நாட்டிற்கு உரியவனே! அறிவில்லாத பேதைமாக்களோடு எதனையும் எப்போதும் சொல்லாதிருப்பாயாக. அந்த பேதை எதையாவது சொல்வதென்றால் சொற்பொருள்களின் வரம்புகள் சிதைந்ததாகவே பேசுவான். கூடுமான வகையிலே எல்லாம் அத்தகையவரைத் தப்பி, அவர்களுடைய தொடர்புகளின்றும் நீங்குதலே நினக்கு நன்மை தருவதாகும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.