மகாநந்திக்கு மகர சங்கராந்தி விழா!
தஞ்சாவூர் பெரிய கோயில் மகாநந்தியெம்பெருமானுக்கு மகர சங்கராந்தி பெருவிழா, ஜனவரி- 15, 16
தஞ்சாவூர் பெரிய கோயில் மகாநந்தியெம்பெருமானுக்கு மகர சங்கராந்தி பெருவிழா, ஜனவரி- 15, 16 தேதிகளில் நடைபெறுகின்றது. இதனையொட்டி ஜனவரி 15 (தை -1) ஆம் தேதியன்று, மகாநந்திகேஸ்வரருக்கு மாலை 6 மணி அளவில் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெறுகிறது. மறுநாள்,மாட்டுப்பொங்கலன்று காலை, பழங்கள், காய்கறிகள், மலர்கள் மற்றும் இனிப்பு வகைகளால் சிறப்பு அலங்காரம் நடைபெறுகின்றது. மேலும் சிறப்பு நிகழ்ச்சியாக 108 பசு மாடுகளுக்கு கோ பூஜையும் நடைபெற உள்ளது.
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை மற்றும் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானமும் இதற்கான ஏற்பாடுகளை விரிவாக செய்துள்ளது. பக்தர்கள் இந்த தெய்வீக விழாவில் கலந்து கொண்டு நந்தி பெருமானின் அருளைப் பெறலாம்.
தொடர்புக்கு: 04362 223384, 274476.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.