பசிபிக் பெருங்கடலில் திங்களன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள டாங்கா தீவில் திங்களன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
Updated On : 30 ஜனவரி, 2024 at 11:28 PM
டாங்கா: பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள டாங்கா தீவில் திங்களன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
பசிபிக் தீவில் உள்ள டாங்கோ பகுதியில் திங்கட்கிழமை காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆகப் பதிவாகியது.
கடலில் இந்த நிலநடுக்கம் 100 மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது என்று அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்து உள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்டுள்ள முழுமையான பாதிப்புகள் குறித்த தகவல் எதுவும் இதுவரை வெளிவரவில்லை.
Advertisement
ஆனால் இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்று பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தகவல் தெரிவித்துள்ளது.