FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

கெளதமாலா எரிமலை வெடிப்பு: பலி எண்ணிக்கை 99-ஆக உயர்வு

மெக்ஸிகோவையடுத்த மத்திய அமெரிக்க நாடான கெளதமாலாவில், எரிமலை வெடித்ததால் ஏற்பட்ட பாதிப்புகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 99-ஆக உயர்ந்துள்ளது.

Updated On : 8 ஜூன் 2018, 12:53 am IST
ஃபியூகோ எரிமலையில் புதிதாக ஏற்பட்ட வெடிப்பு காரணமாக எழுந்த புகை மண்டலம்.
பகிர்:

மெக்ஸிகோவையடுத்த மத்திய அமெரிக்க நாடான கெளதமாலாவில், எரிமலை வெடித்ததால் ஏற்பட்ட பாதிப்புகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 99-ஆக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து அந்த நாட்டின் தேசிய தடய அறிவியல் அமைப்பு வியாழக்கிழமை கூறியதாவது:
கடந்த திங்கள்கிழமை ஏற்பட்ட ஃபியூகோ எரிமலை வெடிப்பு காரணமாக உயிரிழந்த 99 பேரது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இவற்றில், 28 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்றார் அவர். 
அவ்வப்போது சீற்றத்தை ஏற்படுத்தி வந்த ஃபியூகோ எரிமலையில் திங்கள்கிழமை எதிர்பாராத பெருவெடிப்பு ஏற்பட்டது. அதற்கு முன்னதாகவே அந்தப் பகுதி மக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேறுமாறு அறிவுறுத்தியும், அதற்கான நேரம் இல்லாததால் எரிமலைப் பிழம்பிலும், இடிபாடுகளிலும் பலர் புதையுண்டனர்.
இந்தச் சம்பவத்தில் சுமார் 200 பேர் காணாமல் போயுள்ளதாகக் கூறப்படும் நிலையில், அதிகாரிகள் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments