உலகம்

கொழும்பு கடற்கரை முகத்துவாரப் பகுதியில்  குண்டுகள்,  ஆயுதங்களுடன் மூவர் கைது 

இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள கடற்கரை முகத்துவாரப் பகுதியில் ஆயுதங்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.

DIN

கொழும்பு: இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள கடற்கரை முகத்துவாரப் பகுதியில் ஆயுதங்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை தலைநகர் கொழும்புவில் ஈஸ்டர் தினமான கடந்த ஞாயிறன்று தேவாலயங்கள், தங்கும் விடுதிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்களில் 359 பேர் மரணமடைந்தனர். 500-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக இலங்கை போலீசார் இதுவரை 58 பேரைக் கைது செய்துள்ளனர். 18 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது.  மேலும் தேடுதல் வேட்டை தீவிரமாக நடந்து வருகிறது

இந்த தாக்குதல் சம்பவங்களில் மனித வெடிகுண்டுகளாக செயல்பட்டவர்களைப்  பற்றிய விபரங்களை இலங்கை காவல்துறை சேகரித்து வெளியிட்டு வருகிறது. அவர்களில் பெரும்பாலானோர் மேல்தட்டு குடும்பங்களை சேர்ந்தவர்கள் என்பதும் வெளிநாடுகளில் கல்வி பயின்றவர்கள் என்ற அதிர்ச்சித் தகவலும் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள கடற்கரை முகத்துவாரப் பகுதியில் ஆயுதங்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக இலங்கை காவல்துறை செய்தித் தொடர்பாளர் ருவான் குணசேகரா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வியாழன்று இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள கடற்கரை முகத்துவாரப் பகுதியில் ஆயுதங்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் இருந்து 21 கையெறி குண்டுகள் மற்றும் 6 வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த வெடிகுண்டுகள் அனைத்தும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட குறைந்த திறனுடைய குண்டுகளாகும்.

இந்த நடவடிக்கைகள் அனைத்தும் இலங்கையின் குற்றத்தடுப்பு பிரிவு மற்றும் சிறப்பு அதிரடிப்படை இணைத்து எடுத்துள்ள நடவடிக்கைகளாகும். 

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆனால் கைது செய்யப்பட்டவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற விபரத்தை அவர் வெளியிடவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

அச்சுறுத்தும் அழியாத ரசாயனங்கள்

விபத்து எழுப்பும் வினாக்கள்!

SCROLL FOR NEXT