இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
இந்தோனேசியாவில் ஞாயிறு காலை ரிக்டர் அளவுகோளில் 7.3 என்ற அளவுக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஜகார்தா: இந்தோனேசியாவில் ஞாயிறு காலை ரிக்டர் அளவுகோளில் 7.3 என்ற அளவுக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதுதொடர்பாக அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள தகவலில்
இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
ரிக்டர் அளவில் 7.3 என்ற அளவுக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி 9.10 மணியளவில் அந்நாட்டில் உணரப்பட்டுள்ளது.
அந்நாட்டின் வடக்கு மலுகு பகுதியை மையமாகக் கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.