முகப்பு
உலகம்

உலகளவில் கரோனாவால் 26.25 கோடி பேர் பாதிப்பு

உலகளவில் கடந்த ஆண்டிலிருந்து இதுவரை கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 26.25 கோடியாக அதிகரித்துள்ளது. 

Updated On : 30 நவம்பர் 2021, 11:28 am IST
உலகளவில் கரோனாவால் 26.25 கோடி பேர் பாதிப்பு
பகிர்:

உலகளவில் கடந்த ஆண்டிலிருந்து இதுவரை கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 26.25 கோடியாக அதிகரித்துள்ளது. 

உலகம் முழுவதும் கரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்குடன் அரசுகள் செயல்பட்டு வந்தாலும்  நோய் பரவலின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

இந்நிலையில் உலகளவில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 26.25 கோடியாக அதிகரித்திருக்கிறது.

Advertisement

Advertisement

தொற்று பாதிப்பில் முதலிடத்தில் இருக்கும் அமெரிக்காவில் கரோனாவால் 4.84 கோடி பேர் பாதித்திருப்பதாகவும் 7.78 லட்சம் பேர்  உயிரிழந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியாவில் 3.45 கோடி பேர் கரோனாவால் பாதிப்படைந்திருக்கிறார்கள். 4.68 லட்சம் பேர் நோயின் தீவிரத்தில் பலியாகியிருக்கிறார்கள்.

அதற்கு அடுத்தடுத்த இடங்களில் கரோனா அதிகம் பாதித்த நாடுகளாக பிரேசில்- 2.21 கோடி , இங்கிலாந்து - 1.02 கோடி , ரஷியா - 94.7 லட்சம், துருக்கி - 87.32 லட்சம்,  பிரான்ஸ் -77.48 லட்சம் ,   அர்ஜென்டினா- 53.85 லட்சம்  , ஈரான்- 61.94 லட்சம் , கொலம்பியா - 50.67 லட்சம் பேர் என்கிற எண்ணிக்கையில் இருக்கிறது.

பலியானவர்களின் எண்ணிக்கை - பிரேசில் (6,09,099) இந்தியா  (4,59,851), மெக்ஸிகோ  (2,93,897), பெரு  (2,01,158), ரஷியா  (2,39,403),  இந்தோனேசியா  (1,43,819), இங்கிலாந்து  (1,45,253) இத்தாலி  (1,33,739), கொலம்பியா  (1,27,451), பிரான்ஸ்  (1,18,820)  ஈரான் (1,29,711) , அர்ஜென்டினா (1,16,554)

உலகளவில் தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை 50.20 லட்சமாக உயர்ந்திருக்கிறது.தொற்றிலிருந்து மீண்டவர்கள் 25.42 கோடி பேர்.

மேலும் உலகம் முழுவதும் நோயின் தாக்கத்தை குறைக்க இதுவரை 795 கோடி தடுப்பூசிகள்   செலுத்தப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments