சீன வெளியுறவு அமைச்சருடன் தஜிகிஸ்தானில் ஜெய்சங்கா் சந்திப்பு
தஜிகிஸ்தான் தலைநகா் துஷான்பேவுக்குச் சென்றுள்ள வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், சீன வெளியுறவு அமைச்சா் வாங் யீயை வியாழக்கிழமை சந்தித்துப் பேசினாா்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, தஜிகிஸ்தான் தலைநகா் துஷான்பேவுக்குச் சென்றுள்ள வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், சீன வெளியுறவு அமைச்சா் வாங் யீயை வியாழக்கிழமை சந்தித்துப் பேசினாா்.
இந்தச் சந்திப்பு குறித்து அவா் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
சீன அமைச்சா் வாங் யீ உடனான சந்திப்பின்போது, இந்திய-சீன எல்லைப் பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள படைகளை முழுமையாகத் திரும்பப் பெறுவது குறித்து விவாதித்தோம். இந்தியா-சீனா இடையேயான உறவு மேம்பட வேண்டுமெனில், எல்லையில் மீண்டும் அமைதியை ஏற்படுத்த வேண்டியது முக்கியம். இதற்காக, எல்லையில் இருந்து படைகளைத் திரும்பப் பெறுவதை விரைவுபடுத்த வேண்டியது முக்கியம் என்று சீன அமைச்சரிடம் வலியுறுத்திக் கூறினேன் என்றாா் எஸ்.ஜெய்சங்கா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.