FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்ற பிரேசில் அமைச்சருக்கு கரோனா!

ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்ற பிரேசில் சுகாதாரத் துறை அமைச்சர் மார்சிலோ க்வொய்ரோகாவுக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 22 செப்டம்பர் 2021, 4:54 pm IST
பிரேசில் அதிபர் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் (கோப்புப்படம்)
பகிர்:


ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்ற பிரேசில் சுகாதாரத் துறை அமைச்சர் மார்சிலோ க்வொய்ரோகாவுக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஐ.நா. பொதுச் சபையின் ஆண்டுக் கூட்டம் கடந்த 14-ம் தேதி தொடங்கிய நிலையில், உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் பொது விவாதம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

இதில் உரையாற்றிய முதல் உலகத் தலைவர் பிரேசில் அதிபர் ஜெயிர் பொல்சனாரோ. அவருடன் பிரேசில் சுகாதாரத் துறை அமைச்சர் மார்சிலோவும் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்றார்.

Advertisement

Advertisement

இந்த நிலையில் அவருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிரேசில் அதிபர் அலுவலகம் அறிவித்துள்ளது. எனினும், அவர் நலமாக இருப்பதாகவும், அவருடன் இருந்த மற்ற எவருக்கும் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்படவில்லை என்றும் பிரேசில் அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதன்மூலம், அமைச்சர் மார்சிலோ நியூயார்க்கிலேயே 14 நாள்களுக்கு தனிமைப்படுத்திக்கொள்ளவுள்ளார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஐ.நா. பொது விவாதத்தில் செப்டம்பர் 25-ம் தேதி நேரில் பங்கேற்று உரையாற்றவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments